நடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

மன்சூர் அலிகான்

பட மூலாதாரம், TWITTER

பிரசுரிக்கப்பட்டது

பிரபல நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1990ம் ஆண்டு வெளியான 'வேலை கிடைச்சாச்சு' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். வில்லனாகவும், காமெடியனாகவும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். 'வேலைக்காரன்', 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்', 'ஜாக்பாட்' உள்ளிட்ட படங்கள் கடந்த சில வருடங்களில் இவரது நடிப்பில் வெளியானது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு குறைவான வாக்குகளை வாங்கி டெபாசிட் இழந்தார் மன்சூர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் விவேக் மரணத்திற்கு காரணம் அவர் எடுத்து கொண்ட கொரோனா தடுப்பூசிதான் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார் அவர்.

இதையடுத்து கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக இவர் மீது காவல்துறையினரால் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு ரூபாய் 2 லட்சம் அபராதம் விதித்த உயர் நீதிமன்றம், தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுதலை செய்தது.

இந்த நிலையில்தான், சிறுநீரகதில் கல் இருக்கும் பிரச்னை காரணமாக மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் மன்சூர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :