"இதுதான் எங்களை வாழ வைக்கிறது" - ஊறுகாய் விற்று ஊரையே காப்பாற்றும் பெண்கள்

"இதுதான் எங்களை வாழ வைக்கிறது" - ஊறுகாய் விற்று ஊரையே காப்பாற்றும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

இந்த மொத்த கிராமமும் மாங்காய் ஊறுகாய் வாசனையால் நிறைந்துள்ளது. மாங்காய் ஊறுகாய் மட்டுமல்ல. ஒவ்வொரு சீசனிலும், அந்தக் குறிப்பிட்ட சீசனில் இவர்கள் போடும் ஊறுகாய் வாசம் ஊர் முழுக்க வீசுகிறது.

இவர்கள் தாங்கள் சாப்பிடுவதற்காக மட்டுமே ஆண்டு முழுக்க ஊறுகாய் தயாரிப்பதாக நினைத்துவிடாதீர்கள்.

இங்கு தயாரிக்கப்படும் ஊறுகாய் அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதனால்தான், இங்கு கிலோ கணக்கு, குவின்டால் கணக்கையெல்லாம் தாண்டி, டன் கணக்கில் இந்தப் பெண்கள் ஊறுகாய் தயாரிக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: