You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விண்ணில் பாய்ந்த ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்யப்போவது எப்படி?
ப்ரோபா-3 திட்டத்தின் மூலம், சூரியனுக்கு அருகில் இரண்டு செயற்கைக் கோள்களைச் செலுத்தி, செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவதன் மூலம், அதன் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா படலத்தை ஐரோப்பிய விண்வெளி நிலையம் ஆய்வு செய்யவுள்ளது.
ப்ரோபா-3 (PROBA-3) செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி நிலையத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
இதற்காக ஏவப்படும் இரண்டு செயற்கைக் கோள்களின் மூலம், ஓர் ஆண்டில் 50 முறை செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கி, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அத்தகைய ஆய்வுகள் ஒவ்வொன்றும் ஆறு மணிநேரத்திற்கு நீடிக்கும்.
இதன்மூலம், நெருங்கவே முடியாத, அவ்வளவு எளிதில் ஆராய முடியாத சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா என்ற படலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர். இந்த ஆய்வுத் திட்டத்தில் விஞ்ஞானிகள் என்ன செய்வார்கள்?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)