You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களவையில் திமுக.,வை சாடிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மொத்த செலவையும் மத்திய அரசே பார்த்துக்கொள்ளும் என்பதால், அந்த கடன் சுமை குறித்து தமிழ்நாடு அரசு கவலைப்பட வேண்டாம் எனப் பேசினார்.
ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்வியைவிட்டு, அவரே ஒரு பதிலைச் சொல்லி நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்துவதாக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதலில் பொருளாதாரளம் குறித்துப் பேசினார்.
அப்போது, அவர் வளர்ந்த மற்றும் மிகப்பெரிய பொருளாதாளத்தைக் கொண்டுள்ள நாடுகளே கடும் நெருக்கடியை சந்திப்பதாகவும், அவர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்