ஆர்சிபி, மும்பை: ஐபிஎல் ப்ளே ஆஃப்பில் 4வது இடம் யாருக்கு கிடைக்க வாய்ப்பு?

ஆர்சிபி, மும்பை: ஐபிஎல் ப்ளே ஆஃப்பில் 4வது இடம் யாருக்கு கிடைக்க வாய்ப்பு?
பிரசுரிக்கப்பட்டது

ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று நடக்கும் போட்டிகளுடன் லீக் சுற்று முடிந்து, அடுத்ததாக ப்ளே ஆஃப் சுற்று தொடங்க உள்ளது.

ப்ளே ஆஃப் சுற்றில் மொத்தம் 4 அணிகள் பங்கேற்க இருக்கும் நிலையில் அதில் 3 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ், 2வது இடத்தில் சிஎஸ்கே மற்றும் 3வது இடத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், 4வது இடத்தைப் பிடிக்கப் போவது எந்த அணி என்பது இன்று நடக்கும் இரு லீக் ஆட்டங்களின் முடிவில் தெரிந்துவிடும்.

ஆர்சிபி, மும்பை, மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே 4வது இடத்தைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் 4வது இடத்தைப் பிடிக்க எந்த அணிக்கு வாய்ப்புகள், சாத்தியங்கள் அதிகம் என்று இதில் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: