ஓட்டோமான் பேரரசு: அந்தப்புரத்தில் இருந்த அடிமைப் பெண்கள் அரியணை ஏறிய கதை

ஓட்டோமான் பேரரசு: அந்தப்புரத்தில் இருந்த அடிமைப் பெண்கள் அரியணை ஏறிய கதை
பிரசுரிக்கப்பட்டது

வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் சிலர் இருந்தனர்.

"600 ஆண்டுகளுக்கும் மேலான ஒட்டோமான் வரலாற்றில், சுல்தான்களின் தாய்மார்கள் அனைவரும் அடிப்படையில் அடிமைகளாகத்தான் இருந்தனர்," என்கிறார் யேல் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஆலன் மிகைல்.

மனித வரலாற்றின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றான ஓட்டோமான் பேரரசின் அரசியல் அதிகார விளையாட்டில் பெண்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது.

அவர்களில் பலர், சுல்தான்களின் ‘அந்தப்புரங்களில் மறைந்து’ வாழ்ந்தனர், அல்லது சுல்தான்களின் ‘இச்சைக்கு இணங்குபவர்களாக மட்டும் இருந்தனர்’ அல்லது ‘குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரங்களாக’ என்கிறார் வரலாற்றாசிரியர் எப்ரு போயார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: