நெல்லை: பட்டியல் பிரிவினரை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்து சித்ரவதை - என்ன நடந்தது?

நெல்லை: பட்டியல் பிரிவினரை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்து சித்ரவதை - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

திருநெல்வேலி மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பட்டியல் பிரிவு இளைஞர்களை மற்றொரு சாதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் நிர்வாணமாக்கி அவர்கள் மீது சிறுநீர் கழித்து கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரையும் கைகளைத் தூக்க இயலாத அளவுக்கு மரக்கட்டை மற்றும் கத்தியைத் திருப்பி வைத்து தாக்கியதாக, இன்னொரு சாதியைச் சேர்ந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியில் பட்டியல் பிரிவு மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடக்கக் காரணம் என்ன? ஆற்றங்கரையில் குளிக்கச் சென்ற பட்டியல் பிரிவு இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்தவர்களிடம் சிக்கியது எப்படி? தோப்பில் வைத்து இளைஞர்களை என்ன செய்தார்கள்?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)