You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூண்டுக்குள் சென்று புலியை சீண்டிய இளைஞர் - என்ன நடந்தது?
குஜராத்தில் ககாரிய விலங்கியல் பூங்காவில் பிப்ரவரி 9ம் தேதி இளைஞர் ஒருவர் தனது காதலியைக் கவர புலி அடைக்கப்பட்டிருந்த இடத்தில் நுழைந்தார். மரத்தில் ஏறி புலியை சீண்டியுள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த நபரின் பெயர் அருண் பாஸ்வான்.
'தைரியமான ஆளாக இருந்தால் புலிக் கூண்டுக்குள் செல்' என காதலி தொலைபேசியில் கூறியதால் இவ்வாறு செய்ததாக அவர் கூறியதாக மணிநகர் காவல் ஆய்வாளர் உனத்கட் பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.
அந்நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கே என்ன நடந்தது?
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)