தமிழ்மொழி குறித்து ஐ.நாவில் பிரதமர் நரேந்திர மோதி என்ன பேசினார்?

காணொளிக் குறிப்பு, தமிழ் மொழி குறித்து இந்தியா பெருமைப்பட வேண்டும்’
தமிழ்மொழி குறித்து ஐ.நாவில் பிரதமர் நரேந்திர மோதி என்ன பேசினார்?
பிரசுரிக்கப்பட்டது

புதுடெல்லி தல்கத்தோரா விளையாட்டு மைதானத்தில் மாணவர்களின் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, உலகின் தொன்மையான மொழியாக அறியப்படும் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும், தமிழின் தொன்மையை உலகுக்கு எடுத்துரைக்கவே ஐ.நா-வில் பேசும் போதும் தமிழ் குறித்து பேசியதாக தெரிவித்தார்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முன்பாக அமையப் பெற்றிருக்கும் நமது நாட்டின் சிறந்த பாரம்பரியத்தை அனைத்து மக்களும் பெருமைக்கொள்ளும் விதமாக இருக்கிறது என்று கூறிய பிரதமர், பூமியில் பழமையான மொழியான தமிழ் மொழி குறித்தும் நமது நாடு  பெருமைக் கொள்கிறது என்றார்.

தமிழ் மொழி குறித்து இந்தியா பெருமைப்பட வேண்டும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: