ராகுல்காந்திக்கு எம்.பி. பதவி திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளதா? சட்டம் என்ன சொல்கிறது?
ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வெளியான மறுநாளே அவரது எம்.பி. பதவியைப் பறித்து மக்களவைச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 102(1)-ன் படி இந்த தகுதிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மோசடி குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற நீரவ் மோதி, லலித் மோதி உள்ளிட்ட சிலர் குறித்துப் பேசும் போது மோதி என்ற பின்னொட்டை குறிப்பிட்டு அவர் முன்வைத்த விமர்சனம் தொடர்பாக 2019-ம் ஆண்டு இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
2 ஆண்டுகள் சிறைத் தண்டனை எதிரொலியாக பதவியிழந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் உண்டு. ஆனால், அவதூறு வழக்கிற்காக ஒருவரது எம்.பி. பதவி பறிக்கப்படுவது இதுவே முதல் முறை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



