பா.ஜ.க. ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி கைது - காரணம் என்ன?

பா.ஜ.க. ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி கைது - காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சமூக வலைதளத்தில் ஆபாசமாகப் பேசியதற்காக பா.ஜ.க. ஆதரவாளர் கிஷோர் கே. சுவாமி என்பவரை சென்னை நகரக் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு கைது செய்துள்ளது.

பாண்டிச்சேரியில் இருந்த இவர், இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிவரும் கிஷோர் கே. சுவாமி, நவம்பர் மாதத் துவக்கத்தில் மழை, வெள்ளத்தை எதிர்கொள்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தொடர்புபடுத்தி ஆபாசமாகத் தோன்றும் வகையில் கருத்துகளைப் பதிவுசெய்திருந்தார்.

இது குறித்து கிஷோர் கே. சுவாமி மீது இ.பி.கோ. 153, 294 B, 505 -1, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: