You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பரவளையப் பாதையில் பந்தை கோலுக்குள் அடித்த கேமரூன் வீரர்
மிக அருகிலேயே எதிரணியின் கோல் கீப்பர் நிற்கிறார். சில மீட்டர் தொலைவில் கோல்வலை இருக்கிறது. அப்போது கேமரூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர் செய்தது என்ன தெரியுமா? தலைக்கு மேலே சுமார் 20 அடி உயரத்துக்கு பந்தை காலால் தூக்கி வீட்டு ஒரு பரவளையப் பாதையில் அதை கோலுக்குள் அடித்தார்.
இந்த உலகக் கோப்பையில் பிரேசில் வீரர் ரிச்சார்லிசன், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி ஆகியோர் அடித்த வியக்கத்தகுந்த கோல்களுடன் அபூபக்கரின் கோலும் வியந்து பேசப்படுகிறது.
செர்பிய அணியுடனான போட்டியில் தோற்றுப்போகும் என்று கருதப்பட்ட கேமரூன் அணி அதைத் தவிர்ப்பதற்கும் இந்த கோல் அடித்தளமானது.
இதை நம்பமுடியாத கோல் என்று கூறுவதற்கும் காரணமுண்டு. ஏனென்றால் கோல் அடித்தபோது அது ஆப்சைட் என்று முதலில் கருதப்பட்டது. கேமரூன் வீரர்கள் யாரும் கொண்டாடவில்லை. தொலைக்காட்சியில் வர்ணனை செய்து கொண்டிருந்தவர்களும் அது ஆப்சைட் என்றே கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு கோல் கீப்பரைத் தவிர வேறு எந்த வீரரும் இல்லாத இடத்தில் இருந்து அபூபக்கர் ஓடிக் கொண்டிருந்தார்.
இந்த கோல் பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்