மகாராஷ்டிர அரசு மருத்துவமனையில் 2 நாட்களில் 32 பேர் மரணம் - என்ன நடந்தது? – காணொளி
மகாராஷ்டிர அரசு மருத்துவமனையில் 2 நாட்களில் 32 பேர் மரணம் - என்ன நடந்தது? – காணொளி
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்ட்ரா மாநிலம் நான்டெட் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 32 மரணங்கள் பதிவாகி அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.
அக்டோபர் 1ஆம் தேதியன்று 12 பச்சிளங்குழந்தைகள் உட்பட 24 பேர் வரை இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்துள்ளனர்.
அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்புகளையடுத்து, ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிர்கட்சிகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
என்ன நடந்தது இவ்விஷயத்தில்?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



