காணொளி: "அரசியல் பரபரப்புகாக தவெக அரசு இதை செய்றாங்க"-இபிஎஸ்

காணொளிக் குறிப்பு, அரசியல் பரபரப்புகாக தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் -இபிஎஸ்
காணொளி: "அரசியல் பரபரப்புகாக தவெக அரசு இதை செய்றாங்க"-இபிஎஸ்
பிரசுரிக்கப்பட்டது

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் தமிழகத்தில் தவெக அரசு அரசியல் காரணங்களுக்காக தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசியபோது அவர் மகளிர் இடஒதுக்கீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதை மட்டும் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு