You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கணவனை முதுகில் சுமந்து யாத்திரை சென்ற பெண்
அண்மையில் நடந்த கன்வார் யாத்திரையில் உத்திரப் பிரதேசத்தின் மோதிநகரைச் சேர்ந்த ஆஷா ஹரித் பலரின் கவனத்தை ஈர்த்தார். ஹரித்வாரில் கங்கையில் நீராடிவிட்டு தனது கணவனை முதுகில் சுமந்தபடி வருவதாக இவர் கூறுகிறார்.
பிபிசியிடம் பேசியவர், "என் பெயர் ஆஷா ஹரித். நான் மோதி நகரிலிருந்து நடக்க ஆரம்பித்து ஹர் கி புரியில் நீராடினேன். இப்போது என் கணவரை தோளில் சுமந்து வீடு நோக்கி செல்கிறேன். ஹர் கி புரியில் இருந்து நடக்க தொடங்கியபோது, ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது. பின், நடந்தால் முழுமையாக நடக்க வேண்டும் என முடிவு செய்தேன். மக்கள் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. கணவனை தோளில் சுமந்து சொல்கிறார், எவ்வளவு சிறந்த மனைவி இவர் என என்னை பார்ப்பவர்கள் சொல்கிறார்கள். என் கணவர் பெரிய அதிர்ஷ்டசாலி என்று சொல்கிறார்கள். சிலர் கைதட்டுகிறார்கள், சிலர் கைகூப்பி வணங்குகிறார்கள்" என்றார்.
அவரின் கணவர் சச்சின் குமார் பிபிசியிடம் பேசுகையில், "எனக்கு மனைவியின் ஆதரவு உள்ளது. ஒரு வருடம் ஆகிறது, நான் வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன். அதற்கு முன் வேலை செய்து வந்தேன். அது வீட்டை நடத்த உதவியது. ஆனால், விதி வேறு திட்டம் வைத்திருந்தது. என் முதுகெலும்பு காயமடைந்தது. சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடியவில்லை. ஒருவழியாக ஆபரேஷன் செய்த போது, இரண்டு கால்களும் செயலிழந்தன. தற்போது நிலைமை எப்படி உள்ளது என்றால், சில நேரம் குழந்தைகளுக்கு காய்கறிகள் கொடுக்க முயற்சி செய்கிறோம். ஆனால் நானும் என் மனைவியும் தண்ணீருடன் ரொட்டி சாப்பிட்டு விட்டு உறங்கச் செல்கிறோம்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு