You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மூடிய பாக்லிஹார் அணையை மீண்டும் திறந்த இந்தியா - காரணம் என்ன?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளின் மதகுகள் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரம்பன் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பாக்லிஹார் மற்றும் சலால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ மற்றும் பிடிஐ செய்தி முகமைகள் தெரிவித்துள்ளது. இந்த அனைகளிலிருந்து நீர் வெளியேறும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு