காதில் பான்டேஜுடன் கட்சி மாநாட்டுக்கு வந்த டிரம்ப்

காணொளிக் குறிப்பு, காதில் பான்டேஜுடன் கட்சி மாநாட்டுக்கு வந்த டிரம்ப்
காதில் பான்டேஜுடன் கட்சி மாநாட்டுக்கு வந்த டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக மக்கள் முன்பு தோன்றினார்.

திங்கட்கிழமை மில்வாக்கியில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப் பங்கேற்றார்.

ட்ரம்பின் ஆதரவாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

அதேசமயம், மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகில், குடியரசுக் கட்சியின் கொள்கைகளைக் கண்டித்து ட்ரம்பிற்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)