ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உண்மையில் வென்றது அரசியலா, ஆள் அதிகார பலமா?

காணொளிக் குறிப்பு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உண்மையில் வென்றது அரசியலா, ஆள் அதிகார பலமா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உண்மையில் வென்றது அரசியலா, ஆள் அதிகார பலமா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
பிரசுரிக்கப்பட்டது

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை ருசித்திருக்கிறது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி. வாக்குகள் அடிப்படையில் 2வது இடத்தில் அதிமுகவும் 3வது இடத்தில் நாம் தமிழர் கட்சியும் உள்ளன.

அங்கு நடந்த தேர்தலில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பல்வேறு பரிசுப் பொருட்களைக் கொடுத்து வாக்குகளை ஈர்க்க முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தேர்தலில் தோல்வியைத் தழுவிய அரசியல் கட்சிகள் இது தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், அங்குள்ள நிலைமையை விரிவாக அலசுகிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: