You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்லாம் மதத்தில் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுவது ஏன்?
மெக்கா அல்லது மதீனாவில் இஸ்லாம் பரப்பப்படுவதற்கு முன்பே நோன்பு நோற்பது வழக்கமாக இருந்தது. ஆனால் தொடக்கத்தில் நோன்பு இன்று உள்ளது போல் இருக்கவில்லை.
இஸ்லாத்தின் நபி ஹஸ்ரத் முகமது இடையிடையே நோன்பை கடைப்பிடித்திருந்தாலும்கூட ஆரம்ப காலத்தில் அவரது தோழர்களுக்கோ அல்லது பின்பற்றுபவர்களுக்கோ 30 நாட்கள் நோன்பு கட்டாயமாக இருக்கவில்லை.
ஹஸ்ரத் முகமதுவின் ஹிஜ்ரத் அதாவது மெக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்த (கி.பி. 622) இரண்டாம் ஆண்டு அதாவது கி.பி. 624 இல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டது அல்லது கட்டாயமாக்கப்பட்டது. அன்று முதல் உலகம் முழுவதும் எந்தவித மாற்றமும் இல்லாமல் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்