தமிழ்நாட்டில் கருத்துரிமை விவாதம்: பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது சரியா? - காணொளி

தமிழ்நாட்டில் கருத்துரிமை விவாதம்: பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது சரியா? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

மணிப்பூர் விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய புத்தகப் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைதுசெய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் கருத்துத் தெரிவிப்பதற்காக கைது செய்யப்படுவது சரியா என்ற விவாதங்களை எழுப்பியுள்ளது.

கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நடத்திவரும் பத்ரி சேஷாத்ரி, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் மணிப்பூர் விவகாரம் குறித்து பேட்டி ஒன்றை அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்த கருத்துகளுக்காக சனிக்கிழமையன்று பெரம்பலூர் காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

மணிப்பூர் விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பத்ரி சேஷாத்ரி அளித்த பேட்டி ஜூலை 22-ம் தேதி வெளியானது. அதில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் அவர் தெரிவித்திருந்தார்.

அதில், உச்ச நீதிமன்றத்தைப் பற்றி விமர்சித்துப் பேசியிருந்தார். மேலும், 'நாகா - குக்கி - மெய்தேய் பிரச்சனை குறித்து கோர்ட்டுக்கு ஏதாவது தெரியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது', என்பது உள்பட பல கருத்துகளை அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார் பத்ரி.

இதில் நீதிமன்றம் குறித்து, குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி குறித்து அவர் பேசிய கருத்துகள் உள்ளடங்கிய வீடியோ துணுக்குகள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தன. பத்ரியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: