You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹமாஸ் தாக்குதல்: மொசாத் முன்கூட்டியே உளவறியாமல் கோட்டை விட்டது எங்கே?
மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் விரிவானதும் அதிக நிதியளிக்கப்படுவதுமான இஸ்ரேலின் உளவுத்துறை மொசாத்தால் ஹமாஸ் தாக்குதலை முன் கூட்டியே கண்டறிய முடியவில்லை.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த பல ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஹமாஸ் குவித்து வைத்திருந்தது குறித்து உள்நாட்டு உளவுத்துறை, வெளிநாட்டு உளவுத்துறை என யாருக்கும் முன்கூட்டியே தகவல் தெரியவில்லை.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு இணையான உளவுத்துறையை கொண்டுள்ளது இஸ்ரேல். மத்திய கிழக்கில் நடைபெறும் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்து பல துல்லிய தாக்குதல்களை நடத்தியுள்ளது இஸ்ரேல்.
இப்போது என்ன தவறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் இந்த விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்