சென்னை சைதாப்பேட்டையில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்
மிக்ஜாம் புயலால் சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழை இப்பொது நின்றிருக்கிறது.
ஆனால், மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
தி நகர், அண்ணா சாலை போன்ற நகரின் பிரதான பகுதிகளில் நீர் வடிந்து தற்போது நிலைமை சற்று சரியாகி விட்டிருந்தாலும், மற்ற குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் நீர் தேங்கியிருக்கிறது.
இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். பால், உணவு போன்ற அடிப்படை தேவைகள் இன்னும் கிடைக்கவில்லை என்கின்றனர் சிலர்.
சைதாப்பேட்டிய்ல இருந்து பிபிசி செய்தியாளர் சேகரித்து வழங்கிய தகவல்கள் காணொளியில்

சைதாப்பேட்டை குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் தாட்சாயணி, 2015-ஆம் ஆண்டின் சென்னை பெருவெள்ளத்தின் போது சந்தித்த அதே சூழ்நிலையை மீண்டும் எதிர்நோக்க வேண்டுமோ என்ற அச்சத்தில் உள்ளதாகச் சொல்கிறார்.
”எங்கள் வீட்டில் நீர் ஏறியிருக்கிறது. கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறோம். பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லை,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



