நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பாகிஸ்தானின் 'பாம்பே பேக்கரி' - வெற்றியின் ரகசியம் என்ன?
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரின் சதர் பகுதியில் அமைந்துள்ள சிவப்பு நிற கட்டிடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
மரச்சட்டத்தால் செய்யப்பட்ட கதவு திறந்ததும், வரிசையில் நின்றவர்களில் ஒருவர் அறையின் உள்ளே செல்கிறார். அறைக்கு உள்ளே இன்னும் மக்கள் வரிசைகள் உள்ளன. ஒரு பக்கத்தில் பணம் செலுத்தப்படுகிறது. மறுபுறம் டோக்கனை கொடுத்து மக்கள் கேக் வாங்கிச்செல்கின்றனர்.
இங்கே எல்லோரும் தங்கள் முறைக்காகக் காத்திருக்கிறார்கள். பின்னர் ஒன்று அல்லது இரண்டு கேக் பெட்டிகளைச் சுமந்துகொண்டு முகத்தில் வெற்றிகரமான புன்னகையுடன் வெளியே வருகிறார்கள்.
இந்தக் கட்டடத்திற்கு வெளியே 'பாம்பே பேக்கரி' என்று எழுதப்பட்டு, அது நிறுவப்பட்ட ஆண்டு - 1911 என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கரி மற்றும் அதனுடன் தொடர்புடைய வீட்டின் கதை சுமார் 125 ஆண்டுகள் பழமையானது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



