பிரிட்டன் இந்திய தூதரகத்தில் மூவர்ண கொடியை இறக்கிய கும்பல் - இந்தியா அதிருப்தி (காணொளி)
பிரிட்டன் இந்திய தூதரகத்தில் மூவர்ண கொடியை இறக்கிய கும்பல் - இந்தியா அதிருப்தி (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டனின் லண்டன் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று மாலை (மார்ச்19) இந்திய மூவர்ண கொடியை ஒரு கும்பல் அகற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான ஒரு காணொளியில், இந்திய தூதரகத்தின் முன்பு 'காலிஸ்தான்' கொடிகளுடன் சிலர் கும்பலாக திரண்டுள்ளதையும், அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், அங்கிருந்த இந்திய மூவர்ண கொடியை அகற்றுவதையும் காண முடிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ள இந்தியா, டெல்லியில் உள்ள மூத்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Google
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



