You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
10 வயது பார்வை மாற்று திறனாளி சிறுமி நூற்றுக்கணக்கான குழந்தைகளை படிக்க வைப்பது எப்படி?
ஹரியாணாவை சேர்ந்த 10 வயது சிறுமி தன் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கிறார்.
பார்வை மாற்றுத்திறனாளியான அவர் செங்கல் சூளைகளில் பணிபுரிவோர், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் பிள்ளைகள் கல்வி கற்க உதவி வருகிறார்.
அவருடைய இந்த சேவை காரணமாக அவருக்கு குடியரசு தினத்தில் பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. மென்பொருள் உதவியுடன் அவர் மடிக் கணினியில் டைப் செய்யவும் தனது வீட்டுப் பாடங்களை செய்யவும் பழகியுள்ளார்.
நான்காவது மாடியில் இருக்கும் தன் வகுப்பறைக்கு தானே கைத்தடி வைத்து ஏறி செல்லவும் அவரால் முடியும். அவரைப் பற்றிய விரிவான காணொளி இது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)