You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பிரதமர் வெட்கமே இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்' - ராகுல் காந்தி கொந்தளித்தது ஏன்?
மணிப்பூர் மாநில நிலவரத்தை முன்வைத்து, பிரதமர் மோதி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, விடுதலை சிறுத்தைக் கட்சியின் எம்.பி, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் உரையாற்றினர்.
ஆளும் பாஜக தரப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உரையாற்றினர்.
அதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோதி, தமது தலைமையிலான அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்குப் பதிலளித்து, நாடாளுமன்ற மக்களவையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட 10) உரையாற்றினார்.
சுமார் இரண்டு மணிநேரம் அவர் ஆற்றிய நீண்ட உரையை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்