You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜகவை வீழ்த்த பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சிகள் - என்ன நடந்தது?
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று(வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளன.
இந்தக் கட்சிகளுக்குள் எழுந்துள்ள ஒற்றுமை நீடிக்குமா, இந்தக் கூட்டணியால் பா.ஜ.கவை வீழ்த்த முடியுமா?
இந்த ஆண்டில் இந்திய அரசியலில் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாக ஜூன் 23 அமைந்திருக்கிறது. பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் பிகார் தலைநகர் பாட்னாவில் கூடி 2024இல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவது குறித்து வெள்ளிக்கிழமையன்று விவாதித்தனர். பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஒருங்கிணைப்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்