இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய படுகொலைகள் - அதிர்ச்சியூட்டும் காணொளி

காணொளிக் குறிப்பு, பாலத்தீனம்: இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய படுகொலைகள் - பெற்றோரை இழந்த குழந்தைகள்
இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய படுகொலைகள் - அதிர்ச்சியூட்டும் காணொளி
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் கிட்டத்தட்ட 120 குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். 18 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர்.

இஸ்ரேலின் ஸ்டெராட் நகரில் அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் ஆயுது குழுவினர் நுழைந்து தனது குடும்பத்தினரை சுட்டுக்கொன்ற பின், எலியானா சுவிஸ்ஸாவுக்கு வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போனது. பதுன் முஸ்லிமான அமிர் அபு சமிலா உதவியால் மீட்கப்பட்ட டோலெவ்வின் மனைவி ஒடாயா தனது இரண்டு மகளுடன் காவல்நிலைத்துக்கு சென்றார்.

ஆனால், காவல் நிலையமும் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது. ஹமாஸ் குழுவினர் இரு குழந்தைகளின் தகப்பன் அமிரையும், அவர் மீட்ட ஒடாயாவையும் சுட்டுக்கொன்றனர்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)