You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தராகண்ட்: சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்பதில் தொடரும் சிக்கல் - ஏன்?
உத்தராகாண்டில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் போது பணிகளில் ஈடுபட்ட 40 தொழிலாளர்கள் கட்டுமானம் சரிந்து சுரங்கத்தின் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்க பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன இயந்திரங்கள் இல்லாததன் காரணமாக மீட்பு பணிகள் தாமதமாகின. தற்போது டெல்லியிலிருந்து அமெரிக்க இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, நீர் வழங்கி ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)