தத்தளிக்கும் தலைநகர்: வரலாறு காணாத மழையால் யமுனையில் வெள்ளம் - பரிதவிக்கும் மக்கள்

டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்தது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி யமுனா ஆற்றின் நீர்மட்டம் 208.48 மீட்டரை எட்டியுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் அதிகப்படியான நீர் பெருக்கெடுத்து ஓடுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

யமுனா ஆற்றின் கரையைத் தாண்டி முக்கிய சாலைகளிலும் நீர் புகுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டெல்லியின் மயூர் விஹார் யமுனை நதிக்கரையில் நீரில் மூழ்கிய பசுவைக் குழந்தைகள் காப்பாற்றினர்.
டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, யமுனா நதிக்கரையில் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றனர்.
டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மயூர் விஹார் அருகே ஒரு ட்ராக்டர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கரையோரம் வசித்த மக்களின் வீடுகளின் நீரில் மூழ்கியுள்ளன.
டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, யமுனா கரையில் வசித்த மக்கள் தங்கள் உடைமைகளுடன் தற்போது வீதிகளில் வசிக்கின்றனர்.
டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தண்ணீர் அளவு அதிகரித்ததால் டெல்லியின் பழைய இரும்பு பாலம் மூடப்பட்டது.
டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நொய்டா செக்டார் 168ல் வெள்ள நீரில் சிக்கிய 120 பசுக்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.
டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வெள்ளம் புகுந்ததால் வீட்டின் தரைத் தளத்தில் இருந்து மேற்பகுதிக்கு மக்கள் மாறுகின்றனர்.
டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கரையோர பகுதிகளில் வசித்த மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: