கோவிட் காலத்தில் பிரதமர் மோதி அமைத்த பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?

காணொளிக் குறிப்பு, கோவிட் காலத்தில் மோதி அமைத்த பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?
கோவிட் காலத்தில் பிரதமர் மோதி அமைத்த பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?
பிரசுரிக்கப்பட்டது

நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்துவதற்கு முன்பே, நிதியமைச்சர் தலைமையில் ‘கோவிட் -19 பொருளாதார உதவி பணிக்குழு’ (COVID-19 Economic Response Task Force) அமைப்பதாக பிரதமர் மோதி அறிவித்தார். மார்ச் 19, 2020 அன்று இது குறித்து அறிவிக்கப்பட்டது.

இந்தப் பணிக்குழு குறித்து பிரதமர் மோதி, “அனைத்து பங்குதாரர்களிடம் இருந்தும் தொடர்ந்து உரையாடி, கருத்துகள் கேட்கப்படும். அனைத்து சூழ்நிலைகளையும் பகுப்பாய்வு செய்து பொருளாதாரச் சிக்கல்களைக் குறைக்க எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் திறம்படச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்து, எதிர்காலத்தில் முடிவுகளை எடுக்கும்,” என்று அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆனால், இதுகுறித்து பிபிசி ஆய்வு செய்தபோது, கோவிட்-19 பொருளாதாரப் பணிக்குழு உண்மையில் ஆலோசித்ததாகவோ, அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியதாகவோ அல்லது அறிக்கை வெளியிட்டதாகவோ எந்த ஆதாரமும் இல்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)