கடன் கட்ட முடியாத நிலையில் இலங்கை - அடுத்து என்ன நடக்கும்?

பிரசுரிக்கப்பட்டது

உலகின் இரண்டு பெரிய கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களும் இலங்கை தவணை தவறியதாக அறிவித்தன. கடனாளர்களுக்கு முழு தவணையையோ அல்லது ஒரு பகுதி தவணையையோ ஒரு நாடு செலுத்த முடியாதபோது தவணை தவறியதாக பொருள்.

78 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கை செலுத்தவேண்டிய கடன் வட்டித் தவணையை செலுத்துவதற்கான 1 மாத சலுகைக் காலமும் முடிந்த நிலையில், புதன்கிழமை தவணை தவறியுள்ளது இலங்கை.

இப்படி நடக்கும்போது முதலீட்டாளர்கள் மத்தியில் நாடு செல்வாக்கை இழக்கும். இதன் மூலம் சர்வதேச கடன் சந்தையில் கடன் வாங்குவது கடினமாகும். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், பணத்தின் மீதும் உள்ள நம்பிக்கை மேலும் பலவீனமடையும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: