You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நெருக்கடி: போலீஸ் சுட்டதில் ஒருவர் பலி, பலர் படுகாயம் - எங்கே சம்பவம்?
இலங்கையில் நாடு எதிர்கொண்டு வரும் மோசமான பொருளாதார நிலைமையை அரசு கையாளத் தவறியதாகக் கூறி ஏப்ரல் மாத தொடக்கத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்தன. இந்த நிலையில், முதல் முறையாக துப்பாக்கி பிரயோகம் மூலம் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் முற்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக கேகாலை - ரம்புக்கன போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முக்கிய இறக்குமதிகளுக்கு பணம் இல்லாமல் போனதில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி அரசுக்கு எதிரான உணர்வை போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்