You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் இரவு பகலாகத் தொடரும் போராட்டங்கள் - வேற்றுமைகளைக் கடந்து ஒன்றிணைந்த மக்கள்
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் அரசு போதிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சனிக்கிழமை அன்று கொழும்புவில் நடந்த ஆர்ப்பாட்டம் இரவிலும் தொடர்ந்தது.
கொழும்பு நகரத்தின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான காலி முகத்திடலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக வலைதளங்களின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக, சுமார் ஒரு மில்லியன் பேரை திரட்ட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர்.
சனிக்கிழமை காலை 9 மணி முதலே மக்கள் மெல்ல மெல்ல காலி முகத்திடலில் கூட ஆரம்பித்தார்கள். நண்பகலில் கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்டவர்கள் காலி முகத்திடலில் கூடியிருந்தனர்.
தயாரிப்பு: முரளிதரன் காசிவிஸ்வநாதன்
காணொளி, படத் தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்