ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையிடம் வீழ்ந்த இந்தியா

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையுடனான சூப்பர் 4 ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 2 ரன்களை அடிக்கவிடாமல் இலங்கையை தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தது இந்திய அணி. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை இலங்கை கேப்டன் தசுன் ஷனகா எதிர்கொண்டார்.

பந்து பேட்டில் படாமல் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் சென்றது. ரன் அவுட் செய்ய ஸ்டம்புகளை நோக்கி பண்ட் வீசிய பந்து மிஸ் ஆனது. இருந்தாலும் மற்றுமொரு வாய்ப்பு. இப்போது அர்ஷ்தீப் சிங்கிற்கு. அவரும் ரன் அவுட்டை தவற விட, அந்த கேப்பில் 2 ரன்களை ஓடி வெற்றியை உறுதி செய்தது இலங்கை அணி.

ஏற்கெனவே பாகிஸ்தானுடன் இந்திய அணி தோற்றுவிட்டது. இப்போது இலங்கையுடனும் தோல்வி. இந்த இரு தோல்விகளுக்குப் பிறகும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: