ஜாதியை கூறி சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் ரெய்னா - வைரலாகும் காணொளி

காணொளிக் குறிப்பு, சுரேஷ் ரெய்னாவின் வார்த்தைகள் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது
பிரசுரிக்கப்பட்டது

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வருணனை நேரலையின்போது "நானும் பிராமணன் தான்" என்று ஜாதியை கூறி தன்னை அடையாளப்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் சுரேஷ் ரெய்னா பேசிய காணொளியும் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே திங்கட்கிழமை நடந்த துவக்க ஆட்டத்தின்போது, இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா வருணனையில் சேர அழைக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே இந்திய ப்ரீமியர் லீக் போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார்.

இந்த நிலையில், இவர் நேரலை வருணனையில் என்ன பேசினார், அது எப்படி சர்ச்சையானது என்பதை விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :