சமூக வலைதளங்களை கண்காணிக்க உண்மை சரிபார்ப்புப் பிரிவு - மத்திய அரசு அறிவிப்பு
சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் கண்காணிக்க, உண்மைச் சரிபார்ப்பு பிரிவை உருவாக்குவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் கீழ் இந்த உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு உருவாக்கப்படுகிறது.
"தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இன் விதி 3 இன் துணை விதி (1) இன் உட்பிரிவு (பி) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், எந்தவொரு உண்மைச் சரிபார்ப்பையும் செய்ய முடியும். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் பணியகத்தின் கீழ் உள்ள பிரிவு, வணிகம் தொடர்பாக மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவாகும்." என்கிறது அந்த அறிவிப்பு.
இந்த பிரிவை அமைப்பதற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது அந்த மனு கடந்த, மார்ச் 13-ம் தேதியன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, உண்மை கண்டறியும் பிரிவை அமைக்க அரசுக்கு சுதந்திரம் அளித்துள்ளது.