டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோதும் அவர்களுக்கு அனுமதி வழங்க காவல்துறை தரப்பில் தயக்கம் காட்டப்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தை நடத்த டெல்லி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை விவசாயிகள் போராட்டம்

    FARMERS

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, ராகேஷ் கெய்த், பாரதிய கிசான் யூனியன் தலைவர்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஜூலை 22ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட நகர அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

    இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்ட இடத்தை காவல்துறை உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் கெய்த், "200 விவசாயிகள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பேட்ஜுகளுடன் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்," என்று கூறினார்.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 விவசாயிகள் சங்கங்கள், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் கீழ் ஒரே இயக்கமாக செயல்பட்டு வருகின்றன.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதனால் எம்.பி.க்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள ஜந்தர் மந்தரில் தங்களின் போராட்டத்தை நடத்த டெல்லி காவல்துறையிடம் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி வழங்க எந்த எழுத்துபூர்வ கடிதமும் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, விவசாயிகள் ஜந்தர் மந்தரில் ஜூலை 22ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி தருவதாக அறிவித்தது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இந்த அனுமதியை நகர அரசு வழங்கியிருக்கிறது.

    இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ஜந்தர் மந்தர் பகுதியில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. 'பெகாசஸ் ஸ்பைவேருக்கு இந்திய அரசு வாடிக்கையாளர்' - கே.எஸ். அழகிரி, நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக பாண்டிச்சேரியில் இருந்து

    pegasus spying india

    இஸ்ரேலின் என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவின் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்கள் கிளர்ந்து எழாமல், ஊடகம் உண்மையை வெளியிடாமல், எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தாமல் போயிருந்தால் இந்த நாடு அடிமைப்பட்டுவிடும் என்று சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

    இந்தியாவில் இருக்கின்ற வேறெந்த தனியார் அமைப்புகளும் என்.எஸ்.ஓ நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களாக இல்லை, இந்திய அரசாங்கம் மட்டும் அதில் வாடிக்கையாளராக இருக்கிறது. எனவே இந்த உறவு வேலையில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு உள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    என்.எஸ்.ஓ நிறுவனத்துக்கு இந்திய அரசாங்கம் வாடிக்கையாளராக இருக்கின்ற செய்தியை இந்திய அரசாங்கமோ, நாட்டின் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, அல்லது சம்பந்தப்பட்ட துறையோ மறுக்கவில்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    "ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபொழுது உத்தரப் பிரதேசத்தை சார்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் அவருடைய இல்லத்தை உளவு பார்த்தார்கள் என்பதற்காக சந்திரசேகர் அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட ஆதரவை காங்கிரஸ் திரும்பப்பெற்றது. அரசியல் வாழ்க்கையில் ஜனநாயகத்தில் உளவு பார்ப்பது மிகப்பெரிய குற்றம். இந்திய அரசியல் சட்டம் அதை குற்றம் என்று சொல்லியிருக்கிறது. அப்படியிருந்தும் இதுபோல் செய்கிறார்கள்."

    "இந்தியாவினுடைய புலனாய்வு துறைகளுக்கு இது தெரியவில்லை. புலனாய்வுத்துறை தான் தினமும் பிரதமருக்கு தரவுகளை சொல்கிறார்கள். ஆனால் ஒரு புலனாய்வுத்துறைக்கு தெரியாத ஒன்று, பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தெரிகிறது."

    "உடனடியாக இந்தியாவினுடைய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி தெளிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும், " என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  3. அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினதவர்களுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு

    அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினதவர்களுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு

    பட மூலாதாரம், Getty Images

    அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு செய்யும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து, இந்தியாவில் மூன்றாம் பாலித்தனவர்களுக்கு அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலமாகியது கர்நாடகா.

  4. ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுமா?

    டொஷிரோ முடோ

    பட மூலாதாரம், Getty Images

    ஒலிம்பிக் விளையாட்டை ரத்து செய்யும் திட்டம் மொத்தமாக நிராகரிப்படவில்லை என்று டோக்யோ ஒலிம்பிக் 2020 ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    கொரோனா பாதிப்பு நிலவரம் கண்காணிக்கப்பட்டு, தேவைப்பட்டால் “ஆலோசனை” நடத்தப்படும் என்று டொஷிரோ முடோ கூறியுள்ளார்.

    ஒலிம்பிக் விழா வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்த விளையாட்டுகளில் சம்பந்தப்பட்ட 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    “ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் ரத்து செய்யப்படாது” என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச் குறிப்பிட்ட அதே நாளில், இதனை தெரிவித்துள்ளார் டோக்யோ ஒலிம்பிக் 2020 ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவர் டொஷிரோ.

    பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கொரோனாவால் தற்போதைய நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த டொஷிரோ, “கொரோனா பாதிப்பு அதிகமானால் இது குறித்து தொடர்ந்து ஆலோசிப்போம்” என தெரிவித்தார்.

  5. ரஷ்யாவின் புதிய போர் விமானம் 'செக்மேட்'

    ரஷ்யா

    பட மூலாதாரம், DIMITAR DILKOFF/AFP via Getty Images

    புதிய ரக போர் விமானம் ஒன்றை ஆய்வு செய்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

    இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானம் வான்வழி காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

    ‘செக்மேட்’ என்று பெயரிடப்பட்ட இந்த போர் விமானம், 2023ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 15 ஆண்டுகளில் இதே போல 300 போர் விமானங்கள் தயாரிக்கப்படும் என்று அந்நாட்டின் ஒன்றிய விமான அமைப்பின் தலைவர் யூரி ஸ்லையூசர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் மிகவும் மேம்படுத்தப்பட்ட F-35 ரக விமானத்திற்கு போட்டியாக இது கருதப்படுகிறது.

    இந்த விமானத்தை எதிரிகளால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்றும், இதனை செயல்படுத்தும் செலவும் மிகவும் குறைவு என்றும் ரஷ்யாவின் விமான மற்றும் பாதுபாப்பு நிறுவனம் ரஸ்டெக் தெரிவித்துள்ளது.

  6. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை - மத்திய அரசு

    இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கைகளின் மூலம் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வருகிறது என குறிப்பிட்டுள்ளது.

  7. சீனாவில் கனமழையால் நிகழும் மரணங்கள்

    மத்திய சீனாவில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள வீடுகள், சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொதுப் போக்குவரத்து மையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    ஹெனான் மாகாணத்தில் மட்டும் சுமார் 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    வெள்ளம் உண்டானதால் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. மலக்குடல் வழியாக தங்கத்தை கடத்திய நபர்

    துபாயில் இருந்து சென்னை வந்த விமானப் பயணி ஒருவர் தமது மலக்குடல் வழியாக 810 கிராம் தங்கத்தை கடத்தியதாக நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    948 கிராம் எடையுள்ள தங்கப்பசையை அவர் மலக்குடல் வழியாகக் கடத்தி வந்துள்ளார். அதிலிருந்து 810 கிராம் 24 கிராம் தங்கம் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது; இதன் மதிப்பு 40.35 லட்சம் ரூபாய் என்று ஏஎன்ஐ செய்தி முகமை கூறுகிறது.

    கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 தாய் - சேய்கள் விடுவிக்கப்பட்டனர்

    கொள்ளை மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபடும் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் 100 பேரை நைஜீரிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

    ஜம்ஃபாரா மாகாணத்தில் ஜூன் 8ஆம் தேதி இவர்கள் கடத்தப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின்போது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

    இவர்களை விடுவிக்க பணயத்தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை என்று மாகாண அரசின் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மேலதிக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    டிசம்பர் 2020 முதல் இதுபோல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். பெரும்பாலானவர்கள் பணயத்தொகை கொடுக்கப்படாமலேயே மீட்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர்.

    kidnap news
  10. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

    இந்தியா, இலங்கை, தமிழ்நாடு மற்றும் சர்வதேச அளவிலான செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் பிபிசி தமிழ் உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறது.