டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

ஹவாலா பணப்பரிமாற்றம் குறித்த வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய செய்திகள்.

    • நேபாளத்தில் காணாமல் போன விமானம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த விமானத்தில் மொத்தம் 22 பேர் பயணித்தனர். இதுவரை 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
    • தருமபுரி மாவட்டத்தில் வீடு வீடாகச்சென்று, கர்ப்பிணியின் கருவில் இருப்பது ஆணா,பெண்ணா? என கண்டறிந்து, சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவர் உள்ளிட்ட 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
    • கர்நாடகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது விவசாயிகள் சங்க (பி.கே.யு) தலைவர் ராகேஷ் திகையத் மீது மை வீசப்பட்டது.
    • மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி) 2021 குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
    • கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு இன்று (30) முற்பகல் நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
    • கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கிவைத்தார்.
    • இந்தியாவில் 8 ஆண்டுகளில் அரசியல் கலாச்சாரம் மாறியுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
  2. ரயில், பேருந்துகளில் தொடரும் அபாய பயணங்கள் - மாணவர்களைத் தூண்டும் உளவியல் காரணி எது?

  3. “பிரதமர் மோதி பதவிக்கு வந்த பிறகு ஊழல் குறைந்துள்ளது” – அன்புமணி ராமதாஸ்

    "2026ல் பாமக ஆட்சி தமிழகத்தில் நடைபெற வேண்டும். அதற்கு ஏற்ப வருகின்ற தேர்தலில் வியூகத்தை கட்டமைப்போம்" என தெரிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

  4. பிரிட்டன் பிரதமரை சந்தித்த ரணில்

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து இலங்கையின் நிலை குறித்து விவரித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் இலங்கைக்கு உதவ உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. நரேந்திர மோதியை பெண்கள் ஆதரிப்பது ஏன்?

  6. இலங்கையில் கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி: ஒருவர் கைது - இதுவரை நடந்தது என்ன?

  7. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

    டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்திய அமலாக்கத்துறையின், ஹவாலா பணப்பரிமாற்றம் குறித்த வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி முகவை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. யுக்ரேன் போர்: டோன்பாஸில் நிலைமை மோசம் - யுக்ரேன் ஆலோசகர்

    யுக்ரேன் போர்

    பட மூலாதாரம், AFP

    யுக்ரேன் டோன்பாஸில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது என்று யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் நாட்டின் கிழக்கு டோன்பாஸ் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல் குறித்து யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் யூரி சாக் பிபிசியிடம் கூறுகையில், யுக்ரேன் படையினரை "சிறு பகுதிக்குள் சுற்றி வளைத்து, அழிக்க ரஷ்யா முயற்சிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் படைகள் தங்கள் நிலையைத் தொடர்கின்றனர். அவர்கள் வசம் உள்ள பகுதிகளைக் காக்கிறார்கள்." என்று அவர் கூறுகிறார். "ரஷ்ய படையினர், அதிக துப்பாக்கி, அதிக கனரக பீரங்கிகளைக் கொண்டு, அப்பகுதிகளை 24/7 என தொடர் தாக்குதல் நடத்துகிறார்கள்.

    பொதுமக்களின் வீடுகள், மக்களின் கட்டுமானங்கள் மற்றும் யுக்ரேன் ராணுவத்தையும் தாக்குகிறார்கள்" என்று சாக் கூறுகிறார்.

    "நிலைமை மிக மிக தீவிரமானது. யுக்ரேன் படைகள் மேற்கு நாடுகளிடம் இருந்து, தாங்கள் நீண்ட காலமாக கோரி வரும் கனரக ஆயுதங்களை நிச்சமாக எதிர்பார்த்துள்ளனர்." என்கிறார்.

    அதேநேரத்தில், 'டோன்பாஸில் சண்டையிடும் போது, யுக்ரேன் படையினர் பொதுமக்களின் கட்டுமானங்கள் மீது "அட்டூழியமான" தாக்குதல்களை நடத்தியதாக' ரஷ்யா குற்றம் சாட்டியதாக ரஷ்யாவின் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  9. தமிழ்நாட்டை புறக்கணிக்கிறதா மத்திய அரசின் டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன்?

  10. கச்சத்தீவை மீட்க கோரிக்கை: ஸ்டாலினுக்கு இலங்கையில் எதிர்ப்பு - தமிழக அரசின் பதில் என்ன?

  11. தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி பா.ம.கதான் - அன்புமணி ராமதாஸ் பேட்டி

    அன்புமணி ராமதாஸ்
    படக்குறிப்பு, அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில்

    தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக பயிலரங்கதில் அன்புமணி ராமதாஸ் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவிலேயே அதிகம்‌ மது அருந்துகின்ற மாநிலம் தமிழ்நாடு. சமூக பிரச்சினைகள், சட்டம்‌ ஒழுங்கு பிரச்சினைகள், கொலை, கொள்ளை, கற்பழிப்புகளுக்கு எல்லாம் அடித்தளம் மது. எனவே, படிப்படியாக மது விலக்கை கொண்டுவர வேண்டும்.

    இந்திய தேசிய மொழி என்று எதுவும் கிடையாது. தமிழ், இந்தி உட்பட 22 அலுவல் மொழிகள். இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. இதை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும்.

    இந்தி தான் பெரியது, அதிகம் பேசக்கூடிய மொழி இந்தி, இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எதுவும் கிடையாது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் ஒன்று தான். அதில் இந்திக்கு தனி இடம் கிடையாது. எதையும் திணிக்கக் கூடாது.'என்றார்.

    மேலும், 'கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும். அவசர நிலைக்கு முன்பு கல்வி மாநில பட்டியலிலிருந்தது. கல்வி மாநில பட்டியலில் இந்திருந்தால், இந்த நீட் பிரச்சினை வந்திருக்காது. ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கு ஏற்ற கல்விக் கொள்கையை கொண்டுவர உரிமை இருக்கிறது.

    மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பேசி, குரல் கொடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் இப்போது, உண்மையான எதிர்கட்சி நாங்கள் தான். சமீபத்தில் திமுகவிற்கு எதிராக பாஜக என்ற என்ற தவறான ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். அது உண்மையில்லை.

    களத்தில் அப்படி இல்லை. அது ஒருசில ஊடகங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டது. பிஜேபி தேசிய கட்சி, இந்தியாவில் பெரிய கட்சி ஆனால் தமிழ்நாட்டில் சிறிய கட்சி தான்.' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

  12. மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு - மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை

    பட மூலாதாரம், Trichy DMK

    படக்குறிப்பு, திருச்சி செல்வேந்திரன் இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை இன்று பார்வையிடுகிறார். முன்னதாக திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள திமுக மூத்த தலைவர் திருச்சி செல்வேந்திரன் வீட்டிற்கு சென்று, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எ.வ.வேலு, எம்.பி திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    பின்னர், திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள், மக்கள் குறைதீர் கூட்டம், பிறப்பு இறப்பு பதிவேடு உள்ளிட்டவை குறித்த விபரங்களை மேயர் மு.அன்பழகன், ஆணையர் முஜிபுர் ரகுமானிடம் கேட்டறிந்தார்.

    அங்கு வந்திருந்த பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 'மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு!

    அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்....' என்று தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் ஆய்வு

    பட மூலாதாரம், Trichiy City Corporation

  13. பாரதிய கிசான் யூனியன் தலைவர் திகையத் மீது மை வீச்சு

    ராகேஷ் திகையத்

    பட மூலாதாரம், ANI

    கர்நாடகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகையத் மீது மை வீசப்பட்டது.

    பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு) தலைவர் ராகேஷ் திகையத் கர்நாடக மாநிலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வந்த சிலர் திடீரென அவர் மீது மை வீசி, கூச்சலிட்டனர். பின்னர் அங்கிருந்த நாற்காலிகளையும் தூக்கி வீசினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

    இது குறித்து திகையத் கூறுகையில், 'இது கர்நாடக அரசு மற்றும் காவல்துறையின் தோல்வியாகும். இந்த சதித்திட்டம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.' என்று தெரிவித்தார்.

  14. இந்திய அரசியல் கலாச்சாரம் மாறியுள்ளது - ஜே.பி.நட்டா

    இந்திய அரசியல் கலாச்சாரம் மாறியுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது ஜே.பி.நட்டா கூறுகையில், ''இந்தியாவின் அரசியல் கலாச்சாரம் 8 ஆண்டுகளில் மாற்றமடைந்துள்ளது. . பிரதமர் மோதி இந்திய அரசியல் கலாச்சாரத்தை மாற்றியுள்ளார். சேவை, நல்ல நிர்வாகம் மற்றும் ஏழை மக்களுக்கான திட்டங்கள் இவைதான் இந்த அரசின் நோக்கமாக உள்ளது. பொறுப்பான, செயல்திறன்மிக்க அரசாக இந்த அரசு உள்ளது.' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. இலங்கையின் 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி - மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர் விலகல்

  16. அம்பேத்கர் பூமியில் அவரது பெயர் தொடர்பாக நடந்த பயங்கர சாதி கலவரம்

  17. சமூக ஆர்வலர்கள் பெயரில், அதிகாரிகளை துன்புறுத்தினால் நடவடிக்கை - ஆர்.டி.ஐ மாநில அணையர் எச்சரிக்கை

    ஆர்டிஐ மாநில ஆணையர் கூட்டம்

    தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர், அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில் கேள்விகளை கேட்கின்றனர். அவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்ட மாநில ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்துள்ளார்.

    சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தகவல் பெறும் உரிமைச்சட்ட மாநில ஆணையர் பிரதாப் குமார் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மாநில தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு வரும் மனுக்களை, அந்தந்த மாவட்டத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றோம்.

    சேலத்தில் 60 மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை விசாரித்த மனுக்களில், தவறான பதிலளித்த பொது தகவல் அலுவலர்கள் இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஆயிரம் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், 20 - 30 சதவீத பொது அலுவலர் தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.' என்றார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், 'சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரில் சிலர், அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில் கேள்விகளை கேட்கின்றனர். அவர்களையும் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்திலும் தொடர்ந்தால் காவல்துறை மூலம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றார் .

  18. யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் மூன்று இடங்களை பிடித்த பெண்கள்

  19. தருமபுரியில் வீடுவீடாக சென்று கருக்கலைப்பு - போலி மருத்துவர் கைது

    தருமபுரி மாவட்டத்தில் வீடு வீடாகச்சென்று, கர்ப்பிணியின் கருவில் இருப்பது ஆணா,பெண்ணா? என கண்டறிந்து, சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவர் உள்ளிட்ட 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த 14ம் தேதி, புரோக்கர்கள் மூலம் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளனர். இதையடுத்து, அந்த பெண்ணிற்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவரது கர்ப்பபையில் அழுகிய நிலையில் சிசுவின் உடல் பாகங்கள் இருந்துள்ளதுள்ளதால் வயிற்று வலி ஏற்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து மருத்துவர்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினிக்கு தகவல் அளித்தனர். சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க, மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் (பொ) கனிமொழி தலைமையில் கண்காணிப்புக்குழு அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி, தருமபுரி ராஜாபேட்டை ஏரிக்கரை பகுதியில் வெங்கடேசன் என்பவருடைய வீட்டில் 6 கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கனிமொழி, தருமபுரி நகர காவல்நிலைய ஆய்வாளர் நவாஸ், எஸ்ஐ சுந்தரமூர்த்தி ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

    அபோது, அங்கு பணிபுரிந்த 3 பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்தனர். இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட போலி மருத்துவர் சதீஸ்குமார் திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டார்.

    இவர் ஏற்கனவே சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதால், கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டவர்.

    கருக்கலைப்பு கும்பல் கைது
  20. யுபிஎஸ்சி தேர்வு முடிவு வெளியீடு

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி) 2021 குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்திய அளவில் ஷ்ருதி சர்மா இந்த தேர்வில் முதலிடத்தை பெற்றுள்ளார். அங்கிதா அகர்வால், காமினி சிங்லா அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர். மொத்தம் 685 பேரின் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ தேசிய அளவில் 42வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

    இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2