தமிழக வெள்ள சேதத்தை மதிப்பிட மத்திய குழு நியமனம்

இந்த குழுவின் தலைவராக மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா இருப்பார் என்றும் மத்திய வேளாண்துறை, நிதித்துறை, நீர் வளத்துறை, மின்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, கிராமப்புற வளர்ச்சித்துறை ஆகியவற்றின் உயரதிகாரிகள் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் மத்திய உள்துறை இன்று பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ்

    சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டு ஆரஞ்சு எச்சரிக்கையாக மாற்றப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

    இதேபோல புதுச்சேரிக்கு கிழக்கு, தென்கிழக்கே 100 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை - புதுச்சேரிக்கு இடையே சென்னைக்கு வெகு அருகே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, கள்ளக்குறிச்சி சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த குறவர் இன இளைஞருக்கு நெஞ்சுவலி - வேறு மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை

    கள்ளக்குறிச்சியில் திருட்டு வழக்குகளில் கைதான மூன்று குறவர்களில் ஒருவரான சக்திவேலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி இன்று மாலையில் உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் சிறைத்துறை சேர்த்த நிலையில், அங்கிருந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அவரை மாற்ற காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

    ஆனால், தற்போது அங்கிருந்தும் விழுப்புரம் மாவட்டத்தின் முண்டியம்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சக்திவேலை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. கள்ளக்குறிச்சியில் கைதான குறவர்களில் ஒருவருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

    கள்ளக்குறிச்சி
    படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள ஓம் பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி

    கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் மனைவியான புவனேஸ்வரி தனது கணவரும் வேறு இரண்டு பேரும் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

    இந்த விவகாரத்தில் புவனேஸ்வரியின் கணவர் மற்றும் அவரது உறவினர் தர்மராஜ் நீதிமன்ற காவலுக்கு நேற்று அனுப்பப்பட்டனர். மூன்றாவதாக நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட சக்திவேல் இன்று நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  5. கோவில்பட்டியில் போக்சோ சட்டத்தில் வட மாநில இளைஞர் கைது, பிரபுராவ் ஆனந்தன்

    கோவில்பட்டியில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட நபரை போக்சோ சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

    அசாம் மாநிலம் மங்கட்டாய் மாவட்டத்தைச் சேர்ந்த அலிமுதீன் (25). இவர் கோவில்பட்டியில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதை விசாரித்த காவல் நிலைய ஆய்வாளர் நாக குமாரி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு அலிமுதீனை கைது செய்தார். அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழக வெள்ள சேதத்தை மதிப்பிட மத்திய குழு நியமனம்

    உள்துறை

    பட மூலாதாரம், MHA PIB

    தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு நிவாரண நிதியுதவியை மதிப்பிட அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவின் தலைவராக மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா இருப்பார் என்றும் மத்திய வேளாண்துறை, நிதித்துறை, நீர் வளத்துறை, மின்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, கிராமப்புற வளர்ச்சித்துறை ஆகியவற்றின் உயரதிகாரிகள் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் மத்திய உள்துறை இன்று பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிப்படும் அதிகாரிகள் அவரவர் அமைச்சகங்கள் மூலம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்கள் பற்றி நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும் என்றும் அவர்களின் விவரத்தை இன்றைக்குள்ளாக குழுவின் தலைவர் ராஜிவ் சர்மாவிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    அதிகாரிகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதும் இந்த மத்திய குழு தமிழ்நாட்டுக்கு புறப்பட வேண்டும் என்றும் அங்கு கள நிலைமையை பார்வையிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை தர வேண்டும் என்றும் உத்தரவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த அதிகாரிகள் தமிழகத்தில் கள நிலவரத்தை ஆராய்ந்த பிறகு டெல்லி திரும்பியதும் இறுதி மதிப்பீடு செய்த பிறது தங்களுடைய இறுதி மதிப்பீட்டு அறிக்கையை 15 நாட்களுக்குள்ளாக மத்திய உள்துறையில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

  7. போலீஸ் கைது: இந்த விதிகள் பின்பற்றுவது கட்டாயம் தெரியுமா?

    போலீஸ் கைது

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் காவல்துறை ஒருவரை கைது செய்யும்போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதை மீறும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டத்துக்கு எதிரானவை ஆக கருதப்படலாம்.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  8. ஜெய்பீமில் வன்னியர் சங்க அடையாளத்தை தெரியாமல் வைத்திருக்க முடியாது: சீமான்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ஜெய் பீம் படத்தில் வன்னியர் சங்க அடையாளத்தைத் தெரியாமல் வைத்திருக்க முடியாது. அதைத் தவிர்த்திருக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    நடிகர் சூர்யாவுக்கு இதில் தொடர்பிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரானாரின் நினைவு நாளை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் ஜெய் பீம் படம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இதற்குப் பதிலளித்த சீமான், அன்புமணியின் கடிதத்தில் இருக்கும் வலியின் உண்மைத் தன்மையை மறுக்க முடியாது என்று கூறினார்.

    "அந்தோணிசாமி என்பவர்தான் உதவி ஆய்வாளர். எல்லோருக்கும் உண்மைப் பெயரை வைத்துவிட்டு, இவர் பெயரை மட்டும் ஏன் மாற்றினீர்கள் என அன்புமணி கேட்கிறார்.அந்த நடிகர் பேசும்போது பின்னால் வன்னியர் சங்க அடையாளத்தை தெரியாமல் வைத்திருக்க முடியாது. அது வன்னியர் சங்க அடையாளம் என உலகத்திற்கே தெரியும். அதைத் தவிர்த்திருக்கலாம் என்பதுதான் என் கருத்து," என்றார் சீமான்

    "நான் படம் பார்க்கும்போது எனக்கு இதெல்லாம் தோன்றவில்லை. காட்சியிலும் கதாபாத்திரங்களிலும் மூழ்கிவிட்டேன். இவர்கள் சொன்னதுக்குப் பிறகுதான் தெரிகிறது. இல்லாவிட்டால் அப்போதே இதை எடுத்துவிடலாம் என தம்பியிடம் சொல்லியிருப்பேன்., என்றார் சீமான்.இப்போது அதை மாற்றி லட்சுமி, சரஸ்வதி படத்தை வைத்திருக்கிறார்கள். அதைத் தொடக்கத்திலேயே செய்திருக்கலாம். தவிர்த்திருக்கலாம். ஒரு சமூக வலியை வெளிப்படுத்த படத்தை எடுத்து இன்னொரு சமூகத்திற்கு வலியை, வேதனையை ஏற்படுத்திவிடக்கூடாது என்று அவர் கூறினார்.

    எனக்குத் தெரிந்து சூர்யாவுக்கு இதில் சம்பந்தமிருக்காது. கதை கேட்டிருப்பார், நடித்திருப்பார். காட்சியின் பின்புலத்தை கலை இயக்குநர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவர்கள்தான் பார்த்திருப்பார்கள்.

    எனக்கு சிவகுமார் குடும்பத்தை நன்றாகத் தெரியும். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண விரும்புவார்களே தவிர, புதிதாக பிரச்னைகளை உருவாக்க நினைக்க மாட்டார்கள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றுதான் இருப்பார்கள். அவர் திட்டமிட்டு செய்திருக்க மாட்டார். இதற்காகஅவரை மிதிப்பது, உதைப்பது என்றெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி பதிவுபோட்டவரை வேண்டுமானால் உதையுங்கள். அதற்கு நான் வேண்டுமானாலும் காசு தருகிறேன்" என்று தெரிவித்தார் சீமான்.

  9. என்னால் ஜெய்பீம் படத்தைப் பார்க்கவே முடியவில்லை - பார்வதி அம்மாள் பேட்டி

    காணொளிக் குறிப்பு, என்னால் ஜெய்பீம் படத்தைப் பார்க்கவே முடியவில்லை - பார்வதி அம்மாள் பேட்டி

    என்னால் ஜெய்பீம் படத்தைப் பார்க்கவே முடியவில்லை - பார்வதி அம்மாள் பேட்டி

  10. புதைக்கப்பட்ட ராஜ்கிரண் உடல் தோண்டியெடுப்பு - மறுபிரேத பரிசோதனைக்கு நடவடிக்கை

    இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் கடலில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் தமிழக மீனவர் ராஜ்கிரணின் சடலம், அவரது சொந்த ஊரான கோட்டைப்பட்டினத்தில் புகைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

    அவரது மரணத்தில் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா சந்தேகம் எழுப்பி நீதிமன்றத்தில் முறையிட்டார். அதை விசாரித்த நீதிமன்றம் ராஜ்கிரணின் உடலை மறு உடல்கூராய்வுக்கு உட்படுத்தி அதன் முடிவை அவரது மனைவியிடம் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

    இதன்படி ராஜ்கிரணின் உடலை மாவட்ட மருத்துவ அதிகாரிகள், காவல்துறையினர் முன்னிலையில், சுகாதார ஊழியர்கள் தோண்டியெடுத்தனர். உடல்கூராய்வுக்கு அவரது உடல் உட்படுத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக, கடந்த மாதம் மீன்பிடிக்கச் சென்றபோது வழிதவறி இலங்கை கடல் பகுதிக்குச் சென்ற தமிழக மீனவர்கள் இருந்த படகு மீது இலங்கை கடற்படை ரோந்துக்கப்பல் மோதியதாக கூறப்படுகிறது. இதில், சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகிய மீனவர்கள் கடலில் குதித்தனர். அதில் ராஜ்கிரண் நீங்கலாக மற்ற இருவரும் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். ராஜ்கிரணின் உடல் இரு தினங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதைத் தொடர்ந்து இலங்கை துணைத்தூதரிடம் பிடிபட்ட சேவியர், சுகந்தன் ஒப்படைக்கப்பட்டனர். பிறகு நடுக்கடலில் வைத்து ராஜ்கிரணின் சடலம் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ராஜ்கிரணின் சடலம் அவரது சொந்த ஊரான அறந்தாங்கியில் உள்ள கோட்டைப்பட்டினத்தின் கொடிக்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

  11. ’ஜெய் பீம்’ முழக்கத்தை முதலில் வழங்கியது யார்?

    ambedkar

    கடந்த சில நாட்களாக 'ஜெய் பீம்' சினிமா பற்றி நிறையவே பேசப்படுகிறது. சூர்யாவின் இந்தப் படம் ஒரு விளிம்புநிலை சாதியை சேர்ந்த பெண்ணின் நீதிக்கான போராட்டத்தை சித்தரிக்கிறது.

    மகாராஷ்டிராவில் அம்பேத்கர் இயக்கத்தின் லட்சக்கணக்கான தொண்டர்களும், அம்பேத்கருடன் உணர்வுபூர்வமான பந்தம் கொண்டவர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது 'ஜெய் பீம்' என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவின் மூலை முடுக்கிலும் ஜெய் பீம் என்ற சொல் குறித்து ஆயிரக்கணக்கான பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது இந்தச்சொல் மக்களை உணர்ச்சி கொள்ளச் செய்கிறது.

    டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் உண்மையான பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். அம்பேத்கர் இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவரை கெளரவிக்கும் வகையில் அவரை 'ஜெய் பீம்' என்று அழைக்கின்றனர். ஜெய் பீம் என்பது வெறும் வாழ்த்துச் சொல் மட்டுமல்ல, இன்று அது அம்பேத்கர் இயக்கத்தின் முழக்கமாக மாறிவிட்டது. அம்பேத்கர் இயக்கத்தின் ஆர்வலர்கள் இந்த சொல்லை, இயக்கத்தின் உயிர்நாடி என்று வர்ணிக்கிறார்கள்.

  12. தமிழகத்தில் பதிவான மழை

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையின் அளவு.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை

    கொரோனா தொற்றின் நான்காவது அலையின் மோசமான பிடியில் ஜெர்மனி சிக்கியிருப்பதாக அந்நாட்டின் சான்சலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

    கொரோனா நெருக்கடி குறித்த பிராந்திய தலைவர்களுடனான சந்திப்பில் ஏங்கலா மெர்கல் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

    ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் கடந்த புதன்கிழமையன்று புதியதாக 52 ஆயிரத்து 826 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

    பொதுமுடக்கத்தை தவிர்க்க பெல்ஜியத்தில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    "கொரோனா குறித்து வரும் எச்சரிக்கை சமிக்ஞைகள் தீவிரமாக உள்ளன," என அந்நாட்டின் பிரதமர் அலெக்ஸாண்டர் டெ க்ரூ தெரிவித்துள்ளார். மேலும் அந்நாட்டில் மக்கள் புதிய சந்திப்புகளை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    பெல்ஜியத்தில்12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் என்றிருந்த நிலையில் தற்போது 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    சனிக்கிழமையிலிருந்து ஒரு மாத காலத்திற்கு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயமாக்கப்படுகிறது. சினிமா, அருங்காட்சியகம் போன்ற இடங்களில் கோவிட் பாதுகாப்பு டிக்கெட் என்ற அனுமதி பாஸ்கள் கட்டாயம்.

    அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பெல்ஜியம் மக்கள் அனைவருக்கும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பு மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்ட்ரியாவில் தடுப்பு மருந்து எடுத்து கொள்ளாத சுமார் 20 லட்சம் மக்கள் வெளியில் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அங்கு தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  14. 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் - குழந்தைகள் நல ஆணையம் விசாரணை துவக்கம்

    கோவையில் 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக குழந்தைகள் நல ஆணையம் விசாரணை தொடங்கியுள்ளது.

    ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி , ஆணைய உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்துகிறது.

    மாணவியின் பெற்றோர், உடன் பயின்ற மாணவ மாணவிகள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், குழந்தை நல ஆணைய அலுவலர்கள், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    தற்கொலை சம்பவம் தொடர்பாகவும், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆணையத்தின் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

  15. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்

    மழைக்காலங்களில் பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய சில சுகாதார வழிமுறைகள்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும்

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வட தமிழகம் மற்றும் ஆந்திராவின் தெற்கு பகுதியில் நாளை காலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. வட தமிழ்நாட்டில் கன மழைக்கான ரெட் அலர்ட் - 10 முக்கியத் தகவல்கள்

    வட தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    1. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

    2. ஆரம்பத்தில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெறாது என கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது, இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

    3. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இப்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 300 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருக்கிறது. இது நாளை காலை சென்னைக்கு அருகில் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

    4. இதன் காரணமாக கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    5. சேலம், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்.

  18. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. கனமழை நிலவரம்

    தமிழ்நாட்டில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆங்காங்கே மழை பொழிவு தொடங்கியுள்ளது.

    தமிழ்நாட்டில் பெய்து வரும் மழையின் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள இந்த நேரலை பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  20. கனடாவை தாக்கிய புயல் அவசர நிலை அறிவிப்பு

    கனடா புயல்

    பட மூலாதாரம், Getty images

    கனடாவின் மேற்கு மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட புயலின் பாதிப்பால் அங்கு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ரயில் இணைப்பில் ஏற்பட்ட பாதிப்புகளால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கனடாவின் பிரிட்டிஷி கொலம்பியா மாகணத்தை ஞாயிறன்று தாக்கிய புயலால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே சிக்கியுள்ள மக்களை மீட்க கனடாவின் ஆயுதப்படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் இருவரை காணவில்லை.