டோக்யோவில் தொடங்கியது ஒலிம்பிக் விழா; மைதானத்தில் காலியான இருக்கைகள் - நேரலை

பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளின் திறப்பு விழா தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற வேண்டிய போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுகின்றன. இந்த வருடமும் கொரோனா தொற்று பரவல் அச்சத்திற்கு மத்தியில்தான் ஜப்பான், ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஒலிம்பிக் விழா - புகைப்படத் தொகுப்பு

    டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுவிட்டன.

    கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்த முறை பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    தொடக்க விழாவில் ஆயிரத்துக்கும் குறைவான சில முக்கிய நபர்களே கலந்து கொண்டனர்.

    ஒலிம்பிக் விழா - புகைப்படத் தொகுப்பு

    பட மூலாதாரம், Getty Images

    ஒலிம்பிக் விழா - புகைப்படத் தொகுப்பு

    பட மூலாதாரம், Getty Images

    ஒலிம்பிக் விழா - புகைப்படத் தொகுப்பு

    பட மூலாதாரம், Getty Images

    ஒலிம்பிக் விழா - புகைப்படத் தொகுப்பு

    பட மூலாதாரம், Getty Images

    ஒலிம்பிக் விழா - புகைப்படத் தொகுப்பு

    பட மூலாதாரம், Getty Images

  2. தீபிகா குமாரி: இந்தியாவை ஒலிம்பிக் பதக்க பட்டியலில் உயர்த்துவாரா?

    தீபிகா குமாரி: இந்தியாவை ஒலிம்பிக் பதக்க பட்டியலில் உயர்த்துவாரா?

    பட மூலாதாரம், Getty Images

    உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் என பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வாரிக்குவித்த இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி.

    கிரிக்கெட், மிஞ்சிப் போனால் கால்பந்து, டென்னில் என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த இந்தியர்களை, தன் வில்வித்தையால் வசியம் செய்தவர்.

    மகேந்திர சிங் தோனியைப் போல பொருளாதார ரீதியாக பெரிதும் முன்னேறாத ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் பிறந்த தீபிகா குமாரியை சிறு வயதிலேயே வில்வித்தை வசீகரித்தது.

    அவர் குடும்பத்துக்கு பெரிய பின்புலம் எல்லாம் கிடையாது. துடிப்போடு அம்பெய்தி வந்த துரு துரு தீபிகா குமாரி மீரா முண்டாவின் கண்ணில் பட்டார்.

  3. ஒலிம்பிக் விழாவை தொலைக்காட்சியில் பார்த்த மோதி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. இந்திய அணிக்காக எழுந்து நின்ற மோதி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    “வாருங்கள், அனைவரும் இந்திய அணிக்கு துணை நிற்போம்” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ட்வீட் செய்துள்ளார்.

    டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழாவை தொலைக்காட்சியில் பார்த்த மோதி, இந்திய அணி அரங்கத்திற்குள் நுழைந்தபோது, எழுந்து நின்று கைதட்டினார்.

  5. டெரிக் ரெட்மண்ட்: தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய தருணம்

    டெரிக் ரெட்மண்ட்

    பட மூலாதாரம், Getty Images

    விளையாட்டு வீரர்களின் கனவுகளை ஒன்றன் மீது ஒன்றாக பட்டியலிட்டால் உச்சியில் ஒரு கனவு நிச்சயம் உண்டு. அக்கனவின் பெயர் ஐவண்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக்ஸ்.

    அக்கனவுக்கு அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை 'தவம்' என குறிப்பிட்டால் அது மிகையல்ல. ஆண்டுக் கணக்கில் மேற்கொள்ளப்படும் தவங்களுக்கு, பல நேரம் பதக்கங்கள் என்கிற வரம் கிடைப்பதில்லை.

    அப்படி பதக்கங்களை வெல்லாமல், இதயங்களை வென்ற டெரிக் ரெட்மண்டைக் குறித்து தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

  6. இந்தியக் கொடியை ஏந்திச் சென்ற மேரி கோம்

    இந்தியக் கொடியை ஏந்திச் சென்ற மேரி கோம்

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியா சார்பில் துத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணியில் கேப்டன் மன்ப்ரீத் சிங் டோக்யோ ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இந்தியக் கொடியை ஏந்தி செல்லும் காட்சி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. தொடங்கியது ஒலிம்பிக் விழா

    டோக்கியோ

    பட மூலாதாரம், Getty Images

    பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளின் திறப்பு விழா தொடங்கியுள்ளது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற வேண்டிய போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுகின்றன.

    இந்த வருடமும் கொரோனா தொற்று பரவல் அச்சத்திற்கு மத்தியில்தான் ஜப்பான், ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என இதுவரை 80 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  8. மகாராஷ்டிராவில் நிலச்சரிவு - 36 பேர் பலி

    மகாராஷ்டிராவின் தலியே கிராமத்தில் நிகழ்ந்த பெரும் நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்த 32 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள சுடர்வதி கிராமத்தில் 4 பேர் இறந்துள்ளனர்.

    கடந்த 4 நாட்களாக மகாராஷ்டிராவில் தொடர்ந்து மிக கன மழை பெய்து வருகிறது.

    அதுவும் கடந்த இரண்டு நாட்களாக கரையோர மாவட்டங்களான ரைகாட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய இடங்களில் தொடர் மழையால் நிலைமை மிகவும் மோசமானது. அப்பகுதியில் உள்ள வஷிஸ்தி, ஜக்புடி மற்றும் கஜலி நதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல கிராமங்களும் சிறு நகரங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன

    மகாராஷ்டிராவில் நிலச்சரிவு - 36 பேர் பலி

    பட மூலாதாரம், DEFENSE PRO

  9. என் தொலைபேசியை ஒட்டுக்கேட்டது மக்கள் குரல் மீதான தாக்குதல் - ராகுல்

    என் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது. இது ராகுல்காந்தியின் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது அல்ல. நான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர். மக்களின் குரல்களை நான் எதிரொலிக்கிறேன். எனவே, இது மக்களின் குரல் மீதான தாக்குதல் என்று பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. அத்துடன் இந்த பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் இந்திய உள்துறை அமைச்சர் பதவி விலகவேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோதி மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் ராகுல்காந்தி.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பு மருந்து: நீண்ட இடைவெளியான டோஸ்கள் அதிக ஆன்டிபாடிகளை உருவாக்கும்

    தடுப்பு மருந்து

    பட மூலாதாரம், GETTY IMAGES

    ஃபைசர் மற்றும் பயோ என் டெக் தடுப்பு மருந்து இரு டோஸ்களுக்கு இடையில் அதிகப்படியான இடைவெளி இருந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகளை அதிகபடியாக உருவாக்கும் என பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    டெல்டா வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ள எட்டு வார இடைவெளி என்பது சிறந்ததாக இருக்கும் என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வு பிரிட்டனில் ஆல்ஃபா வகை கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருந்த சமயத்தில், பிரிட்டன் தேசிய சுகாதார அமைப்பை சேர்ந்த 503 ஊழியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கண்காணித்து 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் எடுக்கப்பட்டது.

    இந்த ஆய்வில், ஒட்டுமொத்தமாக குறுகிய மற்றும் நீண்ட இடைவெளியில் இரு டோஸ்களை எடுத்து கொண்டவர்கள் இருவருக்குமே எதிர்ப்பு சக்தி நன்றாக உருவாகியிருந்தது என்று தெரியவந்துள்ளது.

    மேலும் 10 வார இடைவெளியில் உருவாகியிருந்த ஆன்டிபாடிகளை காட்டிலும் மூன்று வார இடைவெளியில் குறைவான ஆன்டிபாடிகள் உருவாகியிருந்தன என்று கண்டறியப்பட்டுள்ளது.

  11. பிரபல இணைய தளங்கள் முடக்கம்

    உலக அளவில் பிரபலமான பல இணைய தளங்கள் வியாழக்கிழமை முடங்கின. முடக்கத்தை சந்திக்கும் இந்த தளங்களில் உள்நுழைய முயன்றவர்கள் டி.என்.எஸ். கோளாறு ஏற்பட்டிருப்பதாக தகவலைப் பார்க்க நேர்ந்தது.இதன் பொருள் இந்த தளங்களைத் திறக்கவேண்டும் என்ற பயனர்களின் வேண்டுகோள் அந்த தளங்களை அடைய முடியவில்லை என்பதாகும்.

    Airbnb, UPS, HSBC வங்கி, பிரிட்டீஷ் ஏர்வேஸ் மற்றும் ஆன்லைன் விளைட்டுத் தளங்கள் இப்படி பாதிக்கப்பட்ட தளங்களின் பட்டியலில் அடங்கும். ஆனால், பல தளங்கள் இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டன.

    உலகத்தில் எங்கோ ஒரு மூலையில், குறிப்பிட்ட இணைய தளத்தின் தரவுகளை வைத்திருக்கும் கணினியின் முகவரியை சாதாரணமாக மனிதர்கள் படிக்கத் தகுந்த முகவரியாக, எடுத்துக்காட்டாக, bbc.com, மாற்றுவதுதான் டொமைன் நேம் சிஸ்டம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் டி.என்.எஸ். ஆகும்.

  12. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் தொடர்ந்து நேரலையாக வழங்குகிறோம். இணைந்திருங்கள். இந்த நாள் இனிதாகட்டும்.