தனியாரில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அதிகபட்ச கட்டணத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நிர்ணயித்து இருக்கிறது.
கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் நிர்ணயித்திருக்கும் விலைக்கு, சரக்கு மற்றும் சேவை வரியையும் சேர்த்து, சேவைக் கட்டணமாக 150 ரூபாய் மட்டுமே கூடுதலாக வசூலிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆக, கோவிஷீல்ட் தடுப்பூசி ஒரு டோஸ்க்கு 780 ரூபாயும், கோவேக்சின் தடுப்பூசிக்கு 1,410 ரூபாயும், ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு 1,145 ரூபாயும் அதிகபட்சமாக வசூலிக்கலாம் என அமைச்சகம் அறிவித்திருப்பதாக ஏஎன்ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.









