குஜராத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது டோக்டே புயல்

பட மூலாதாரம், EPA
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் டோக்டே புயல் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் டோக்டே புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்திய வானிலை மையம் திங்கள் மாலை, “அதிக தீவிரமான டோக்டே புயல்” கரையை கடக்க தொடங்கியது என தெரிவித்திருந்தது.குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.1998ஆம் ஆண்டு பிறகு ஏற்பட்ட புயல்களில் டோக்டே வலுவான புயலாக கருதப்படுகிறது.குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில்தான் டோக்டே புயலின் பாதிப்புகளும் வந்து சேர்ந்துள்ளன. இருமாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகள் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.









