கொரோனா வைரஸ்: தமிழகம் - 743, சென்னை - 553; இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகள் எவ்வளவு?

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை, நேற்று, செவ்வாய்க்கிழமை ஒரு லட்சத்தைக் கடந்தது. நேற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3,000-ஐ கடந்தது. தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்

    மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று புதிதாக 570 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உள்நாட்டு விமான சேவை மே 25 முதல் தொடங்குகிறது என விமானபோக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா சான் ஃப்ரான்சிஸ் கோவில் மேலும் இரண்டு பாதுகாப்பான தூங்கும் பகுதிகளை உருவாக்கி உள்ளது. "safe sleeping villages" என்று அழைக்கப்படும் அந்த பகுதிகளுக்கு வீடற்ற மக்கள் தங்கள் டெண்டுகளை எடுத்து வந்து தங்கிக்கொள்ளலாம்.

    ஜூம் ஆப்வாயிலாக ஒருவருக்கு மரணதண்டனை வழங்கி உள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம். மலேசியாவை சேர்ந்த 37 வயதுடைய புனிதன் கணேசன் எனும் நபர் ஹிராயன் கடத்திய குற்றச்சாட்டில் சிங்கப்பூர் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கிஉள்ளது.

    மதுரைக்கு அருகில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி தலத்தில் கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கியுள்ளன.

  3. தூத்துக்குடியில் 5 பேர் குணமடைந்தனர்

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை 104பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 29 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் 73பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 68பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, வரி வருவாயில் மே மாத பங்கை விடுவித்தது மத்திய அரசு

    மத்திய வரிகளில் இருந்து மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய மே மாதத் தொகையை மத்திய நிதி அமைச்சகம் இன்று விடுவித்தது. எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து 46,038.70 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

    இதில் தமிழகத்தின் பங்காக 1928.56 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 8552.19 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிஹாருக்கு 4631.96 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்திற்கு 3630.60 கோடி ரூபாயும் மேற்கு வங்கத்திற்கு 3461.65ம் ராஜஸ்தானுக்கு 2752.65ம் கேரளாவிற்கு 894.53 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளன.

  5. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 987 பேர் குணமடைந்தனர். இந்தியாவில் விமானப் போக்குவரத்து துவங்குகிறது.. சர்வதேச அளவில் நிலவரம் என்ன? நேரலை

  6. தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது

    tamilnadu

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டில் மேலும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 83 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள். 557 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக சுகாதாரத் துறை இன்று மாலையில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி தமிழ்நாட்டில் 660 பேருக்கும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு வந்த 83 மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், 743 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதில் சென்னையில் 557 பேரும் செங்கல்பட்டில் 58 பேரும் காஞ்சிபுரத்தில் 14 பேரும் திருவள்ளூரில் 23 பேரும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191ஆக உயர்ந்துள்ளது.

  7. மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி

    women

    பட மூலாதாரம், Getty Images

    மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 31 பேருக்கு வைரஸ் தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இதுவரை 81.4 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

    கடந்த 9 தினங்களாக புது நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 50க்கும் குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது.

    இதற்கிடையே ஜூன் 1ஆம் தேதி முதல் மலேசியாவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்றும், இதற்குரிய செலவை மலேசிய அரசு ஏற்காது என்றும் மூத்த அலைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

    தனிமைப்படுத்தப்படும் மலேசியர் அல்லாத ஒரு நபர், நாள் ஒன்றுக்கு 150 மலேசிய ரிங்கிட் (ஒரு ரிங்கிட் = 17.5 இந்திய ரூபாய்) செலுத்த வேண்டும் என்றும், மலேசியர்கள் இதில் 50 விழுக்காடு செலுத்தினால் போதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில் நிபந்தனைகளுடன் கூடிய பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் போது திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் விளம்பரங்களுக்கான படப்பிடிப்பை நடத்த மலேசிய அரசு அனுமதி அளித்துள்ளது.

    படப்பிடிப்பை நடத்த நான்கு மாதங்களுக்கு முன்பே அது தொடர்பான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், ஒரே சமயத்தில் படப்பிடிப்பில் 20 நபர்களுக்கும் மேல் பணியாற்றக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  8. சிங்கப்பூர் நிலவரம்

    women with mask

    பட மூலாதாரம், Getty Images

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று புதிதாக 570 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    புதிய நோயாளிகளில் இருவர் மட்டுமே சிங்கப்பூரர்கள் என்றும், பெரும்பாலானோர் தங்குவிடுதியில் உள்ள அந்நியத் தொழிலாளர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இன்றைய தேதியில் உலகிலேயே மிக அதிகமான விகிதத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளைச் செய்துள்ள நாடாக சிங்கப்பூர் உள்ளது.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் இன்றைய பாதிப்பு என்ன?

    தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக சென்னையில் 557 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

  10. உம்பான் அதி தீவிரப் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது

    அதிதீவிரப் புயல் உம்பான் மேற்கு வங்கத்துக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கரையை கடக்கத் தொடங்கியது.

    மேற்கு வங்கத்தின் திகாவுக்கும் வங்கதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கும் இடையே, சுந்தரவனக் காட்டுக்கு அருகே பிற்பகல் 2.30 மணியளவில் உம்பான் கரையைக் கடக்கும் செயல்பாடு தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல் தெரிவிக்கிறது.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, மே 25 முதல் விமான சேவை

    உள்நாட்டு விமான சேவை மே 25 முதல் தொடங்குகிறது என விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார். பயணிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அறிவிக்கப்படும் என அவர் பகிர்ந்துள்ள ட்விட்டில் கூறி உள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. "கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் அதிகம் இருப்பது, நமக்கு கிடைத்த மரியாதை"

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் 61,149

    இந்தியாவில் இப்போது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 61,149 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42,298 என்ற அளவில் உள்ளது என்கிறார் சுகாதார துறை இணை செயலாளர் லவ் அகர்வால்.

  14. புலம்பெயர் தொழிலாளர்கள்: தொடரும் அவலம்

  15. நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை, தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் அறிவிப்பு

    நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை

    இலங்கையில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலைக்கு அமைய எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை கிடையாது என தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

    எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது.

    உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த விசாரணைகளின் போது, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய மற்றும் அதன் உறுப்பினர் நலின் அபேசேகர ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

    இலங்கையில் தேர்தலை நடத்த முடியும் என சுகாதார பிரிவினர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் வரை தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

    தேர்தலை நடத்த முடியும் என சுகாதார பிரிவினர் அறிவித்தல் விடுக்கும் சந்தர்ப்பம் முதல், தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், தேர்தல் தேதியை சவாலுக்கு உட்படுத்தி மனுவொன்றை தாக்கல் செய்திருந்த சட்டத்தரணி ஷரித்த குணரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

    சட்டத்தரணி ஷரித்த குணரத்னவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் கிடைத்துள்ள நிலையிலேயே தான் இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

    எனினும், தேர்தல் வர்த்தமானி மற்றும் நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானி ஆகியவற்றிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகளை ஐந்து நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் விசாரணை செய்து வருகின்றது.

    நாடாளுமன்றம் கலைப்பு

    இலங்கை நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் இருக்கின்ற நிலையில், தேர்தலை நடத்தும் நோக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்ற கலைப்பு தொடர்பிலாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

    இந்த வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் மாதமே நிறைவடைந்திருந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

    கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பின்னணியில், இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் மார்ச் 20ஆம் தேதி தீர்மானித்தது.

    இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்த நிலையிலும், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்தமையினாலும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

    இந்த நிலையில், மார்ச் மாதம் 20ஆம் தேதி தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், சுகாதார மற்றும் பாதுகாப்ப பிரிவினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, தேர்தலை ஜுன் மாதம் 20ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி, ஜுன் 20ஆம் தேதியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது.

    எவ்வாறாயினும், கொரோனா தொற்று பிரச்சினை நாட்டில் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படாத காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, தேர்தல் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வந்திருந்தனர்.

    இந்த நிலையிலேயே உயர்நீதிமன்றத்தில் தேர்தலுக்கு எதிராக பல அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை ஐந்து பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  16. கொரோனா வைரஸ்: 6 முக்கிய தகவல்கள்

    கொரோனா வைரஸ்: 6 முக்கிய தகவல்கள்

    பட மூலாதாரம், Getty Images

    இப்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 49 லட்சத்து 13 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 23 ஆயிரத்து 579 பேர் பலியாகி உள்ளனர், 17 லட்சத்து ஆயிரத்து இருபத்து நான்கு பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் என்கிறது ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள். அதிகபட்சமாக அமெரிக்காவில் 91 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் கொரோனாவில் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் பிரிட்டனும், இத்தாலியும் உள்ளது

    கோவிட்-19 தொற்றை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 25 லட்சத்தைக் கடந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 25,12,388 முறை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 1,08,121 பரிசோதனைகள் நடந்துள்ளன. சென்னையில் தொடர்ந்து ராயபுரம் மண்டலத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்.தற்போதுவரை ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 1423 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 15 பேர் வரை இங்கு உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகர் பகுதியில் 610 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் 8 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். சென்னையிலேயே குறைந்த அளவாக ஆலந்தூர் மண்டலத்தில் 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் 7672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக நாளொன்றுக்கு குறைந்தது ஆறு முறை கைகளை கழுவுவது பலனளிக்கும் என்று பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றை ஒத்த வேறு வைரஸ் தொற்றுகளின், 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை வைத்து செய்யப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பேர் பலியாகி உள்ளனர். இதனைஅடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,972 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யா உள்ளது.

    அமெரிக்கா சான் ஃப்ரான்சிஸ்கோவில் மேலும் இரண்டு பாதாகாபான தூங்கும் பகுதிகளை உருவாக்கி உள்ளது. "safe sleeping villages" என்று அழைக்கப்படும் அந்த பகுதிகளுக்கு வீடற்ற மக்கள் தங்கள் டெண்டுகளை எடுத்து வந்து தங்கிக் கொள்ளலாம். இந்த பகுதிகளில் உணவு, கை கழுவும் நிலையங்கள், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சான் ஃப்ரான்சிஸ்கோவில் இதுவரை 2,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜூம் ஆப் வாயிலாக ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி உள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம். மலேசியாவை சேர்ந்த 37 வயதுடைய புனிதன் கணேசன் எனும் நபர் ஹிராயன் கடத்திய குற்றச்சாட்டில் சிங்கப்பூர் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நைஜீரியாவில் ஒருவருக்கு ஜூம் வாயிலாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் நீதிமன்றங்கள் இணையவழியில் இயங்குகின்றன.

  17. இந்திய மீனவர்கள் விடுதலை

    இந்திய மீனவர்கள் விடுதலை

    இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானம்

    இலங்கையில் கைதுசெய்யப்பட்டுதடுத்து வைக்கப்பட்டுள்ள 26 இந்திய பிரஜைகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மிரிஹானதடுப்பு முகாமில் மொத்தமாக 28 இந்தியபிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களில் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையினால் எஞ்சிய 26 பேரை மாத்திரமே விடுதலை செய்யதீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களில் 11 இந்திய மீனவர்களும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை கடற்பரப்பிற்குள்அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களே இவ்வாறு நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளனர்.எஞ்சிய 15 பேரும்விசாஇன்றி இலங்கையில்சட்டவிரோதமாகதங்கியிருந்தவர்கள்எனதெரிவிக்கப்படுகின்றது.கொரோனாவைரஸ்தாக்கம் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, குறித்தஇந்தியபிரஜைகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலைசெய்யதீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அதேவேளை,இவர்களைதவிர, வர்த்தக உள்ளிட்ட பல்வேறு காரணங்களின்நிமித்தம்இலங்கைக்குவருகைதந்த நிர்க்கதிக்குள்ளானஇந்தியபிரஜைகளும், இவர்களுடன் சேர்த்து அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.இலங்கையிலுள்ளஇந்தியபிரஜைகள் எதிர்வரும் 29ஆம் தேதிஏயார்இந்தியாநிறுவனத்திற்குசொந்தமான விசேட விமானமொன்றின் ஊடாக இந்தியாநோக்கிபயணிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்தியஉயர்ஸ்தானிகராலயம்தெரிவித்துள்ளது.இவ்வாறு இந்தியா செல்வோர்அங்குதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான இந்தியஉயர்ஸ்தானிகராலயம்அறிவித்துள்ளது.கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளஇந்தியபிரஜைகள் முதற்கட்டமாக எதிர்வரும் 29ஆம் தேதியே தாயகம் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  18. ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் வட மாநில தொழிலாளர்களின் அவலநிலை

    "ஊருக்கு திரும்பி போக பஸ் டிக்கெட் 7000 ரூபாய் சொல்கிறார்கள். வேலை பார்த்த இடத்தில் காசு தரவில்லை." - தொடரும் வட மாநில தொழிலாளர்களின் அவல நிலை

  19. உத்தர பிரதேச தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் பேருந்து

    உத்தரப்பிரதேசத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்காக ஆயிரம் பேருந்துகளை காங்கிரஸ் சார்பில் தருவதாக பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி இருந்தார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன.

    ஒரு கட்டத்தில் கோபமான பிரியங்கா காந்தி, “நாங்கள் அனுப்பும் பேருந்துகளில் உங்கள் கட்சியின் கொடியை வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளுங்கள். ஆனால், பேருந்துகளை அனுமதியுங்கள்" என கூறி இருந்தார்.

    பின்னர், உத்தர பிரதேச அரசு காங்கிரஸின் உதவியை ஏற்றுக் கொண்டது. சரி. இந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது?

    பிபிசி இருதரப்பிலும் பேசியது.

    priyanka gandhi congress party

    பட மூலாதாரம், Getty Images

  20. கொரோனா - ரத்தம் உறையும் பிரச்சனை

    தீவிரமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 30 சதவிகிதம் பேருக்கு அபாயகரமான முறையில் ரத்தம் உறையும் பிரச்சனை உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    corona health coronavirus news

    பட மூலாதாரம், Getty Images