கத்தியை காட்டி மிரட்டிய திருடனை கட்டிங் பிளேயர் மூலம் விரட்டியடித்த வங்கி பெண் மேலாளர்

பிரசுரிக்கப்பட்டது

ராஜஸ்தானில் உள்ள ஒரு வங்கிக்குள் முகமூடியுடன் நுழைந்த நபர், கத்தியைக் காட்டி மிரட்டி, வங்கி ஊழியர்களிடம் இருந்து செல்பேசியை பறித்தார். அப்போது வங்கி மேலாளர் பூனம் குப்தா, அங்கு மேஜை மீதிருந்த கட்டிங் பிளேயர் உதவியுடன் அந்த திருடனை மிரட்டியபடி அவரை வெளியேற்றினார்.

இந்த காணொளி வைரலாவதைத் தொடர்ந்து, வங்கி மேலாளர் பூனம் குப்தாவின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: