கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான ஐவர் மீது பயங்கரவாத தடுப்பு வழக்குப்பதிவு

பிரசுரிக்கப்பட்டது

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் மீது ஏற்கெனவே பதிவான முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்ற சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் வேறு சில சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்களால் புதிய கோணத்தில் இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: