ஜெயலலிதாவுக்கு 'இந்த' சிகிச்சையை ஏன் தரவில்லை?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்டு ரசல் இருவரும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என பரிந்துரைத்திருக்கின்றனர். ஆனால், அந்த அறுவை சிகிச்சை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படவில்லை என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மருத்துவர் ரிச்சர்ட் பீலே, ஜெயலலிதாவுக்கு அந்த அறுவை சிகிச்சை தேவையில்லை எனக்கூறியுதாக, ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் பாபு ஆபிரகாம் கூறியதாக அந்த அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல தகவல்கள் அடங்கியுள்ள இந்த அறிக்கை விவரங்கள் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்