You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எறும்புகள் - திண்டுக்கல்லில் பெருகியது எப்படி?
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சுமார் 20 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கரந்தமலை காட்டுப்பகுதியைச் சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன.
காட்டுப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மேற்கண்ட கிராமத்தினரின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகளைப் பராமரிப்பது. இந்த மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிகப்படியான எண்ணிக்கையில் எறும்புகள் பரவத் தொடங்கின.
ஆண்டுகள் செல்லச் செல்ல மலையின் மேல் பகுதியிலிருந்த எறும்புகள் தற்போது கிராமப் பகுதிகளுக்குள் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. கிராமங்களில் இருக்கக்கூடிய கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களைக் குறி வைத்து இந்த எறும்புகள் தாக்குவதாகவும் அதனால் கால்நடைகள் கண் பார்வையை இழந்து உயிரிழந்து விடுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்