You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜக மாவட்ட தலைவர் பல்கலை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கைது
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவகாரத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், அவருக்காக தேர்வு எழுதியவரான திவாகர் மாதவன், உடந்தையாக இருந்ததாக ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூரில் உள்ள திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்தும் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது.
அந்த தேர்வில் 6 பாடங்கள் உள்ள நிலையில் சனிக்கிழமை 5ஆவது பாடத்துக்கான தேர்வு நடத்தப்பட்டது.
அதில் பிஏ அரசியல் அறிவியல் பாடத்துக்கான தேர்வை எழுத வந்த பாஸ்கர் என்ற மாணவரின் அடையாள அட்டை மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டை தேர்வு அறை அதிகாரி சரிபார்த்தார். அப்போது, பாஸ்கருக்கு பதிலாக திவாகர் மாதவன் என்பவர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரியவந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்