பேரீச்சை சாகுபடியில் அசத்தி வரும் தருமபுரி விவசாயி
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டம் அரியக்குளம் கிராமத்தில் பேரீச்சை சாகுபடி செய்து மற்ற விவசாயிகளுக்கு முன் மாதிரியாக இருந்து வருகிறார் விவசாயி நிஜாமுதின்.
அரபு நாடுகளில் பேரீச்சை பண்ணைகளில் பணிபுரிந்தபோது, நமது ஊரிலும் ஏன் இந்த பேரீச்சையை சாகுபடியை செய்து பார்க்க கூடாது என எண்ணம் தோன்றியது. இதனைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் குறைந்த அளவு பேரீச்சை செடிகளை நடவு செய்து பார்த்ததில் நல்ல முறையில் விளைச்சல் வரத்தொடங்கியதும் 11 ஏக்கர் நிலம் முழுவதும் பேரீச்சையை சாகுபடி செய்திருப்பதாக தெரிவிக்கிறார் நிஜாமுதீன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்